பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை 9.5 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.2000 நிதியுதவி ரூ.19,000 கோடி நிதியை வழங்கினார் பிரதமர் மோடி

May 14 2021 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று விடுவித்துள்ளார்.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டப்படி, நாடு முழுவதும் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை, 3 தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இப்பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் 8-வது தவணைத் தொகையை, பிரதமர் திரு. மோடி இன்று வழங்கினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 9 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கிக்கணக்கில், தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம், 19 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சில பயனாளிகளுடன் பிரதமர் உரையாடினார். மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திரசிங் தோமர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00