இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்தை கடந்தது - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலி
May 14 2021 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகிவுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46 ஆயிரத்து 809-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 317-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 37 லட்சத்து 4 ஆயிரத்து 893 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.