சகோதரத்துவம் மற்றும் மனிதகுலத்தின் சேவைக்கு எடுத்துக்காட்டாக ரம்ஜான் பண்டிகை விளங்குகிறது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து
May 14 2021 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. மோடி, உலகளாவிய பெருந்தொற்றிலிருந்துமீண்டு மனித நலனை மேம்படுத்த பணியாற்றுவோம் என கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சகோதரத்துவம் மற்றும் மனிதகுலத்தின் சேவைக்கு எடுத்துக்காட்டாக இப்பண்டிகை விளங்குவதாக கூறியுள்ளார். சமூகம் மற்றும் நாட்டின் நலனுக்காக, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தொற்றிலிருந்து விடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு. மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்களின் ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்விற்காகவும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். உலகளாவிய பெருந்தொற்று நோயைக் கடந்து, மனித நலனை மேம்படுத்த பணியாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.