இந்தியாவில் அரிதினும் அரிதாக காய்க்கும் மியாசாகி மாம்பழம் - ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
Jun 18 2021 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் அரிதினும் அரிதாக காய்க்கும் மியாசாகி மாம்பழம், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் பகுதியில் அமைந்துள்ள மாம்பழ தோட்டத்தில் விளைந்துள்ள ஜப்பான் வகை மியாசாகி மாம்பழங்களை பாதுகாக்க அதன் உரிமையாளர்களான தம்பதியர், 4 காவலர்கள் மற்றும் 6 நாய்களை காவலுக்கு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தங்கள் தோட்டத்திற்குள் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த மியாசாகி மாம்பழங்களை திருடி சென்றதாகவும், ஒரு கிலோ மாம்பழத்தை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த மாம்பழங்களை பாதுகாக்கவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் பணியமர்த்தி உள்ளதாக கூறியுள்ளனர்.