மணிப்பூர், அசாம், மேகாலயா மாநிலங்களில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
Jun 18 2021 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூர், அசாம், மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தின் சாண்டெல் பகுதியில் அதிகாலை 1.06 மணிக்கு 3 ரிக்டர் அளவிலும், அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் அதிகாலை 2.04 மணிக்கு 4 புள்ளி 1 ரிக்டர் அளவிலும், மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் அதிகாலை 4.20 மணிக்கு 2 புள்ளி 6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.