டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 14 அசைய சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு - அடுத்த மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் என அறிவிப்பு
Jun 18 2021 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான 14 அசைய சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் முன் வராத சூழலில் மேலும் சில சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தொடர் வருவாய் இழப்பு காரணமாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள ஏர் இந்தியாவின் 14 அசையா சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவன அலுவலகங்கள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளை வாங்க விரும்புவோர் ஏலத்தில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் www.airindia.in என்ற இணையதளத்தில் ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.