இந்தியாவில் 11-வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று - கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு பாதிப்பு
Jun 18 2021 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 587 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர்.
கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் 1 லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 480 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 62 ஆயிரத்து 793-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 587 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 83 ஆயிரத்து 490-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 7 லட்சத்து 98 ஆயிரத்து 656 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 கோடியே 85 லட்சத்து 80 ஆயிரத்து 647 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 88 ஆயிரத்து 977 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.