கேரளாவில் 20,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : ஒரே நாளில் 116 பேர் உயிரிழப்பு
Jul 31 2021 10:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 ஆயிரத்து 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14 ஆயிரத்து 651 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் 13 புள்ளி 61 சதவீதமாக உள்ளது. கொரோனா தொற்று விகிதம் குறையாததால், கேரளாவில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.