இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று 12வது சுற்று பேச்சுவார்த்தை - சீன எல்லையிலுள்ள மால்டோவில் ராணுவ கமாண்டோக்கள் பங்கேற்பு
Jul 31 2021 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சீன எல்லையிலுள்ள மால்டோவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு நாட்டு படைகள் திரும்பப் பெறப்பட்டன. இரு தரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 12-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை 10.30 மணிக்கு அசல் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே சீன எல்லையில் மால்டோ பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.