குஜராத் அருகே திடீரென தகர்ந்த குடிநீர் தேக்க தொட்டி - ஆள் நடமாட்டம் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
Jul 31 2021 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தில் 40 ஆண்டுகள் பயன்பாட்டிலிருந்த மேல்நிலை தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூனாகத் மாவட்டத்தின் கிர்சாரா கிராமத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த அந்த தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தபோது, மக்கள் யாரும் அங்கு இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த தண்ணீர் தொட்டி சேதமடைந்து காணப்பட்டதாகவும், இதனை சீரமைக்க கோரி பலமுறை துறைசார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.