மத்தியப் பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து - 22 கைதிகள் படுகாயம்
Jul 31 2021 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 22 கைதிகள் படுகாயம் அடைந்தனர்.
மத்திய பிரதேசத்தின் பிந்தி மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறைச்சாலை உள்ளது. இதில், தண்டனை பெற்ற சிறை கைதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்து ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில், சிறையில் இருந்த 22 கைதிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த கைதிகள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் இல்லை என பிந்தி மாவட்ட காவல்துறை தலைவர் திரு. மனோஜ் குமார் சிங் கூறியுள்ளார்.