மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் - கர்நாடக புதிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பிடிவாதம்
Jul 31 2021 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் திரு. பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. பசவராஜ் பொம்மை, டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார். பின்னர் அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் இணைந்து பிரதமர் திரு. மோடியை சந்தித்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திரு. பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும், காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையுள்ளதாகவும் தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலையின் கருத்து பற்றி கவலையில்லை என்றும், அவர் பேசியதற்கு பதில் அளிப்பதும் தனது வேலை இல்லை என்றும் திரு.பசவராஜ் பொம்மை கூறினார். மேகதாது அணையை கட்ட கர்நாடக அரசு ஒரு செங்கலைக் கூட வைக்க முடியாது என்றும், மேகதாது அணையை கட்டவிடமாட்டோம் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. அண்ணாமலை சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.