பஞ்சாபில் நாளை மறுநாள் முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவு - கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்
Jul 31 2021 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 2-ம் தேதிமுதல், அனைத்துப் பள்ளி மாணாக்கர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 49 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதுடன், ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. ஒட்டுமொத்த பாதிப்பு 5 லட்சத்து 99 ஆயிரத்து 53 ஆக உள்ளது. இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் வரும் 2-ம் தேதிமுதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், வரும் 2-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக பஞ்சாப்பில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.