கேரளாவில் மீண்டும் 22 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று - ஒரேநாளில் 178 பேர் பலி
Sep 16 2021 6:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக கேரளா உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழ் பதிவான நிலையில், இன்று மீண்டும் 22 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரேநாளில் 22 ஆயிரத்து 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 178 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 26 ஆயிரத்து 563 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 190 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.