நாடு முழுவதும் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
Sep 17 2021 8:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2020-ம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக தினசரி 77 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 2020--ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்களின் தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டில் நாளொன்றுக்கு 77 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 80 கொலைகளும் பதிவாகியுள்ளன. ஆண்டு முழுவதும் மொத்தமாக 28 ஆயிரத்து 46 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 310 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 2 ஆயிரத்து 679 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 2 ஆயிரத்து 339 வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆண்டு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 3 லட்சத்து 71 ஆயிரத்து 503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 8 புள்ளி 3 சதவீதம் குறைவு என என்.சி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.