உத்தரபிரதேச மாநிலம் ஃபெரோசாபாத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 60-க்கும் மேற்பட்டோர் பலி : மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு
Sep 17 2021 8:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலம் ஃபெரோசாபாத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபெரோசாபாத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு மற்றும் Encephalitis காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளிலும் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக புதிய உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து, ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர்கள் குழு, ஃபெரோசாபாத் சென்றது. 15 மருத்துவர்கள் அடங்கிய இக்குழு, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், கிராமங்களின் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான அறிவுரைகளையும் இக்குழு வழங்கியது.