உத்தரபிரதேசத்தில் இடைவிடாது பெய்யும் கனமழை : லக்னோ நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பு
Sep 17 2021 8:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில், Lucknow, Kanpur, Barabanki, Saharanpur, Moradabad, Sambhal, Bijnor, Amroha, Sultanpur உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. லக்னோ நகரில், நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரில், குழந்தைகள் நீச்சல் அடித்த விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.