மும்பையில் பழைய இரும்பு கிடங்கில் பற்றிய தீ - அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
Sep 17 2021 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் பழைய இரும்பு கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பை அருகே Mankhurd பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்பு கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் 6 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11 ம் தேதி, பால்கர் மாவட்டத்தின் போய்சார் தாராபூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.