கடந்த 6 நிதி ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிப்பு - மத்திய நிதியமைச்சர் தகவல்
Sep 17 2021 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 6 நிதி ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் சுமையை குறைக்க, தேசிய சொத்து மறு சீரமைப்பு நிறுவனத்தின் மூலம் 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்திய கடன் தீர்வு நிறுவனம் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம், 2 லட்சம் கோடியிலான பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார். இதில், முதல் கட்டமாக 90 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறினார். மேலும் கடந்த 6 நிதியாண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் திருமதி.நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.