புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு ஆனதை குறிக்கும் வகையில் எதிர்ப்புப் பேரணி - சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் இன்று ஏற்பாடு
Sep 17 2021 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆனதை குறிக்கும் வகையிலும் சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் இன்று எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி, 3 புதிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு, பா.ஜ.க. கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் தொடக்கம் முதலோ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, சிரோமணி அகாலிதள கட்சியின் ஒரே உறுப்பினரான ஹர்சிம்ரத் கவுர், தனது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், சிரோமணி அகாலிதள கட்சி, மத்திய அரசின் புதிய மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்தும் சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் இன்று எதிர்ப்பு பேரணி நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இருந்து நாடாளுமன்றம் வரை கட்சியின் மூத்த தலைவர்கள் திரு.சுக்பீர் சிங் பாதல் மற்றும் திரு.ஹர்சிம்ரத் கவுர் தலைமையில் இந்த மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது.