இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு லடாக் எல்லையில் படை குறைப்பு குறித்து ஆலோசனை
Sep 17 2021 10:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க தஜிகிஸ்தான் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர், லடாக் எல்லையில் படை குறைப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டுக் கூட்டம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேவில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் துஷன்பே சென்றுள்ளனர். மேலும், பிரதமர் திரு. மோடி, காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக துஷன்பே சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் இயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்வது, அமைதியை நிலைநாட்டுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.