வடமாநிலங்களில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் - இரண்டே வாரங்களில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்
Sep 17 2021 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடமாநிலங்களில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, இரண்டே வாரங்களில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிவேகத்தில் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. அம்மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 3 ஆயிரம் பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகி வருவதால், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறும், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.