இந்திய பங்கு சந்தையில் மீண்டும் புதிய உச்சம் - மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 60 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது
Sep 17 2021 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை புதிய உச்சத்துடன் தொடங்கின. சென்செக்ஸ், இதுவரை இல்லாத அளவாக 59 ஆயிரத்து 500 புள்ளிகளை கடந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 418 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத அளவாக 59 ஆயிரத்து 559 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 113 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 742 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 48 காசாக இருந்தது.