இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி
Sep 17 2021 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 27 ஆயிரம் பேரும், நேற்று 30 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 34 ஆயிரத்து 403 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 81 ஆயிரத்து 728-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 320 பேர் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 248-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 3 லட்சத்து 39 ஆயிரத்து 56 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 கோடியே 25 லட்சத்து 98 ஆயிரத்து 424 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 37 ஆயிரத்து 950 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 77 கோடியே 24 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.