காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்
Sep 17 2021 1:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். புல்வாமா மாவட்டத்தின் தெலங்காம் கிராமத்தில் இன்று போலீசாரும், ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பயன்படுத்திய 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் ஆயுதங்களை எந்த பயங்கரவாத அமைப்பு பதுக்கிவைத்திருந்தது என்பது பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை.