இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
Sep 17 2021 7:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் இன்று ஒரேநாளில் இரண்டு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஒரேநாளில் 5 மணி நிலவரப்படி, இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 80 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 78 கோடியே 72 லட்சத்து 49 ஆயிரத்து 174 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 59 கோடியே 19 லட்சத்து 261 பேரும், இரண்டாம் தவனையை 19 கோடியே 52 லட்சத்து 79 ஆயிரத்து 913 பேரும் செலுத்தியுள்ளனர்.