பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் : விசாரணை நடத்த நிபுணர் குழு அமைக்கக்கோரிய வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
Oct 27 2021 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெகாசஸ் போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பளிக்கிறது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த, ஒரு குழு அமைக்க உத்தரவிடக் கோரி, மூத்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.