இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு தரவுகள் திருப்தி அளித்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அங்கீகாரம் : உலக சுகாதார அமைப்பு தகவல்
Oct 27 2021 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவாக்சின் தடுப்பூசியின் தரவுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இருந்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதன் அங்கீகாரம் குறித்த தகவல் வெளியாகலாம் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் பெறுவதற்கான தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. கோவாக்சினின் அங்கீகாரம் குறித்து முடிவெடுப்பதற்கான உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் Margaret Harris, மதிப்பாய்வில் அனைத்து தரவுகளும் சரியாக இருந்து குழுவினர் திருப்தி அடைந்தால், அடுத்த 24 மணி நேரத்தில் பரிந்துரை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.