குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க வாய்ப்பு - மத்திய அரசு தகவல்
Oct 27 2021 9:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த, தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, குழந்தைகளுக்கான கோர்பேவேக்ஸ், கோவாவேக்ஸ், ஜைகோவ்-டி, கோவேக்சின் ஆகிய 4 தடுப்பூசிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார். பின்னர், விலை, விநியோகம், இருப்பு உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் என்றும், அதன் பிறகே, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். எனவே, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க, அடுத்த ஆண்டு ஜனவரி, மார்ச் மாதம் ஆகிவிடும் என்றுக் கூறினார். மேலும், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கே முதலில் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.