மஹாராஷ்ட்ராவில் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரு தவணையும் செலுத்தப்பட்டது - நாட்டிலேயே முதல் மாநிலமாக சாதனை
Oct 27 2021 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிலேயே முதலாவதாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரு தவணையும் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மஹாராஷ்ட்ராவில் 3 கோடி மக்களுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அலுவலகம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதில் மஹாராஷ்ட்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் என்னும் இலக்கை நோக்கி மஹாராஷ்ட்ரா பயணித்து வருவதாகவும், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்ட்ராவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் மேலாகவே பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அம்மாநிலத்தில் புதிதாக ஆயிரத்து 201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தற்போது வரை 22 ஆயிரத்து 981 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.