இந்திய ராணுவத்தின் காலாட் படை, பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் 75-ம் ஆண்டு தின கொண்டாட்டம் - டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரியாதை
Oct 27 2021 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் காலாட் படை, பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் 75-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை தளபதி திரு.பிபின் ராவத் மரியாதை செலுத்தினார்.
இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர் படையான காலாட் படை, காஷ்மீரில் பாகிஸ்தான் படை ஊடுருவிய போது, கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி, ஸ்ரீநகர் விமானப் படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஷ்மீா் பள்ளத்தாக்கை மீட்டது. காலாட் படையின் இந்த வீரச் செயலைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ம் தேதி இந்திய ராணுவம் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில், முப்படை தளபதி திரு.பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி திரு.எம்.எம்.நரவனே உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.