இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 765-ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை தகவல்
Dec 2 2021 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 9 ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 477 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 765 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரத்து 541-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 477 பேர் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 724-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 99 ஆயிரத்து 763 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 548 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும், இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 54 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 124 கோடியே 96 லட்சத்து 19 ஆயிரத்து 515 டோஸ், கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.