கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்க வேண்டும் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் வேண்டுகோள்
Dec 2 2021 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது Omicron என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் மேலும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான எளிதான தடை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதான் என்றும், இந்தியாவில் இதை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரபல நச்சுயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை, பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்க கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.