உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கொரோனா தொற்றுக்கு ஆளானதன் எதிரொலி - முகக்கவசம் அணிந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
Dec 2 2021 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அறிந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.வி. ரமணா, நீதிமன்றத்திற்குள் முகக்கவசம் அணிந்தபடி வழக்கு விசாரணையில் ஈடுபட்டார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம், மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, நேற்று தான் ஒரு மூத்த வழக்கறிஞரை சந்தித்ததாகவும், அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி திரு.என்.வி.ரமணா, முகக்கவசம் அணிந்துகொண்டு வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்.