இந்தியாவில் 9 ஆயிரத்தை கடந்தது ஒமைக்ரான் பாதிப்பு
Jan 20 2022 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாறிய கொரோனா, தற்போது ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 28 மாநிலங்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளதாகவும், நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 287-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.