இந்தியாவில் 159.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன
Jan 20 2022 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 159 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73 லட்சத்து 38 ஆயிரத்து 592 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, 159 கோடியே 67 லட்சத்து 55 ஆயிரத்து 879 டோஸ், கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.