புதிய தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு
Jan 20 2022 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட Brahmos ஏவுகணை சோதனை, வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஒடிஷா மாநிலம் பாலசோர் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட, பிரமோஸ் ஏவுகணை சோதனை, வெற்றி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுகணையில், அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மோஸ் வெற்றியைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.