கேரளாவில் ஒரே நாளில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்‍கு கொரோனா தொற்று - மேலும் 32 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தகவல்

Jan 20 2022 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் ஒரே நாளில் 46 ஆயிரத்து 387 பேர் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்‍கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. ஒரே நாளில் 46 ஆயிரத்து 387 பேருக்‍கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 388 பேர் குணமடைந்துள்ளதாகவும், மேலும் 32 பேர் பலியானதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனாவுக்‍கு பலியானவர்களின் எண்ணிக்‍கை 51 ஆயிரத்து 501ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், எனினும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரிகள் மூடல், வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பொதுக்‍கூட்டங்களில் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அம்மாநில அரசு அமல்படுத்தக்‍கூடும் என தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00