புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து மீண்ட 76 வயது முதியவர் - வீடு திரும்பிய போது மேளதாளங்கள் முழங்க பூக்கள் தூவி வரவேற்பு
Jan 21 2022 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் 76 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய போது அவரது குடும்பத்தினர் மேளதாளங்கள் முழங்க பூக்கள் தூவி அவரை வரவேற்றனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் சுப்பிரமணியன். 76 வயதான இவர் ஓய்வு பெற்ற சிறை அதிகாரியாகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்து உள்ளார், இந்நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய அவரை வரவேற்கும் விதமாக அவரது குடும்பத்தினர் பேனர் வைத்தும், மேளதாளங்கள் முழங்க பூக்கள் தூவி அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.