உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், அகிலேஷ் யாதவ், கர்வால் தொகுதியில் போட்டி - சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு
Jan 21 2022 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி தலைவர் திரு. அகிலேஷ் யாதவ், கர்வால் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், சமாஜ்வாடி தலைவர் திரு.அகிலேஷ் யாதவ், தேர்தலில் போட்டியிடுவாரா என சந்தேகம் எழுந்தது. தற்போது ஆஸம்பூர் தொகுதி எம்.பியாக உள்ள அவர், எம்.பியாகவே தொடர்வாரா என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், கர்வால் தொகுதியில் திரு.அகிலேஷ் போட்டியிடவுள்ளதாக சமாஜ்வாடி தேசிய செய்தி தொடர்பாளர் அஷுதோஷ் வர்மா தெரிவித்துள்ளார். தனது மக்களவைத் தொகுதி வாக்காளர்களின் கருத்துகளைக் கேட்டு, அதன்படியே இந்த முடிவை திரு.அகிலேஷ் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். திரு.அகிலேஷ் யாதவ், இந்த தேர்தலில் போட்டியிட்டால்தான், கட்சியினர் கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்பதாலும், தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற்றால், பிரச்சனை இன்றி முதலமைச்சராக பதவியேற்க முடியும் என்பதாலும், திரு. அகிலேஷ் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. திரு. அகிலேஷ் போட்டியிடவுள்ள கர்வால் தொகுதியில், கடந்த 3 தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.