மகாராஷ்டிராவில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு
Jan 21 2022 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24-ம் தேதி திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்ட்ராவில் கொரோனா 3-ம் அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை மூட கடந்த 8-ம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. வரும் பிப்ரவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே அரசின் முடிவால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக பெற்றோர், ஆசிரியர் தரப்பில் புகார் எழுந்தது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 24-ம் தேதி முதல் திறக்க மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன. கிண்டர் கார்டன் பள்ளிகளையும் அதே நாளில் திறக்கவும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் எடுக்கவும் மஹாராஷ்ட்ரா அரசு அனுமதி அளித்துள்ளது.