பாகிஸ்தான் போரில் வென்றதன் நினைவாக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதி இடமாற்றம் - ராகுல் எதிர்ப்பு
Jan 21 2022 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி இந்தியா கேட் பகுதியில் 50 ஆண்டுகளாக எரிந்துவந்த, அமர்ஜவான் ஜோதி அணையா தீபம், தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா தீபத்துடன் இணைக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. பின் தனி நாடாக வங்கதேசம் உருவானது. அந்த போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக 1972-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பின், அமர்ஜவான் ஜோதி அணையா தீபம், இன்று இடமாற்றம் செய்யப்பட்டது. தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா தீபத்துடன், இந்த தீபமும் இணைக்கப்பட்டது. இதனிடையே, அமர்ஜவான் ஜோதி அணைக்கப்படுவதற்கு திரு. ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்த நிலையில், தீபம் அணைக்கப்படவில்லை என்றும், தேசிய போர் நினைவிடத்தில் உள்ள தீபத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.