இந்திய பங்குச் சந்தையில் தொடர் சரிவு - சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது
Jan 21 2022 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு காணப்படுகிறது. சென்செக்ஸ், 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 691 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 774 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 194 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 563 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 51 காசாக இருந்தது.