இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 9 ஆயிரத்து 692-ஆக அதிகரிப்பு - இந்தியா வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு
Jan 21 2022 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 9 ஆயிரத்து 692-ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், அவர்கள், 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், RT-PCR பரிசோதனையானது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.