உச்சநீதிமன்ற நீதிபதிகள் 14 பேருக்கு கொரோனா - 2 பேர் தொற்றிலிருந்து மீண்டனர்
Jan 21 2022 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மொத்தமுள்ள 32 நீதிபதிகளில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். மீதமுள்ள 12 நீதிபதிகளும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் விசாரணை நடந்துவரும் நிலையில், நீதிபதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.