அபுதாபி ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப் கொண்டுவரப்பட்டன
Jan 21 2022 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் பஞ்சாப் கொண்டுவரப்பட்டன.
அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17-ம் தேதி, ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா கொண்டுவரப்பட்டன. இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்று 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட உள்ளது.