புதுச்சேரி: சிறைக்கைதியின் எலும்பு முறிவு கட்டுக்குள் செல்போன்
Jan 21 2022 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் சிறைக்கு திரும்பிய கைதியின் கால் கட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போஃனை சிறை துறையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் சமிபத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர் ரவுடி வினோத். இவருக்கு கை மற்றும் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக கை கால்களில் மாவு கட்டு போட்டுள்ளார். இதனை பரிசோதனை செய்து மாற்று கட்டு போட்டபின் அரசு மருத்துவமனையில் இருந்து மீண்டும் அவரை சிறைக்கு அழைத்து வந்த போது சிறை வார்டன்கள் வினோத்தை பரிசோதனை செய்தனர். அப்போது அவரின் கால் கட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போஃன் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.