இந்தியாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் குறைந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
May 13 2022 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 10-க்கு கீழ் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 841 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 16 ஆயிரத்து 254-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 190-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 18 ஆயிரத்து 604 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 25 லட்சத்து 73 ஆயிரத்து 460 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 295 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 190 கோடியே 99 லட்சத்து 44 ஆயிரத்து 803 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.