நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் : கடன்களுக்கான வட்டிவிகிதம் மேலும் உயரலாம் என நிபுணர்கள் கணிப்பு
May 13 2022 4:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மேலும் உயர்த்தலாம் என நிதிச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நாட்டில் சில்லறை பணவீக்கம் அரசின் கணிப்பையும் தாண்டி, 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7 புள்ளி 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் விலையை கட்டுப்பாட்டில் வைக்க எதிர்வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி 4 சதவிகிதம் உயர்த்தியிருந்தது. இருப்பினும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் ஜூன் மாதம் முதல் வட்டி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.