வரதட்சணை கேட்பது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறு இல்லை : பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் காட்டம்
May 25 2022 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெண்ணை திருமணம் செய்துகொள்ள, ஆண்மகன், வரதட்சணை கேட்பது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறு இல்லை என பீகார் முதலமைச்சர் திரு.நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கல்லூரி விழா ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், வரதட்சணைக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை பீகார் அரசு செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், தான் படித்த காலத்தில் கல்லூரிகளில் பெண்களே இருக்கமாட்டார்கள் என தெரிவித்தார். தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறப்பானவர்களாக திகழ்வதாக கூறினார். எந்த திருமணத்தில் வரதட்சணை இல்லை என திட்டவட்டமாக கூறுகிறார்களோ, அந்த திருமண விழாவில் மட்டுமே தான் பங்கேற்பதாக திரு. நிதிஷ் குமார் தெரிவித்தார். ஒரு ஆண், ஒரு பெண்ணைதான் திருமணம் செய்ய முடியுமே தவிர, ஒரு ஆணையா திருமணம் செய்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். அப்படி இருக்கும்போது பெண்ணை திருமணம் செய்துகொள்ள, ஆண்மகன், வரதட்சணை கேட்பது போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறு இல்லை என திரு.நிதிஷ் குமார் கடுமையாக விமர்சித்தார்.